எனது மின்னூல்கள்

Tuesday, 18 September 2018

முச்சந்தி முரசு - 20



  காதுகளுக்குப்  பாட்டு
  கைகளுக்கு விளையாட்டு
  கல்விக்கோ பூட்டு


முச்சந்தி முரசு - 19



 துண்டிக்க விரும்பா தொடர்பு:

அரை நொடிக்கொருதரம் புதுப்பிப்பு

அரட்டையர் குழுவில் அங்கலாய்ப்பு

அவ்வப்போது வேலையின் நினைப்பு

Wednesday, 12 September 2018

முச்சந்தி முரசு - 18



  மவுனப் புரட்சி

  பேரவையில் பல்லோர்
  பெருவிவாத சர்ச்சைகள்
  இல்லையொரு பேச்சு
  இணைய வழியாச்சு

முச்சந்தி முரசு - 17



வரிதோறும் வரி

வழிக்கு வருவார்களோ
வலைதளப் பதிவர்கள்
வரிக்கு வரி வரி விதித்திட்டால்?

முச்சந்தி முரசு - 16

அகிலமே அமைதி!

அமைதி அமைதி
ஆழ்ந்த மூழ்கிப்பு
அவரவர் கைத்திரையில்

Friday, 30 March 2018

முச்சந்தி முரசு - 15




காவிரிக் கொடை:

காவிரி ஓடினால் கழனியெல்லாம் செழிக்கும்
காவிரி வாடினால் மணற்கொள்ளை கொழிக்கும்
காவிரி ஓடினும் வாடினும் ஊடகம் தழைக்கும்


முச்சந்தி முரசு - 14




ஆண்டி ஆக்கினீரே:

பழம் கேட்டேன் மறுத்தீர்கள்
பாஷாணம் ஏற்றேன் சுரண்டினீர்கள்
பசும்பொன் கொண்டேன் திருடினீர்கள்
பழநி மலைபோதும், விட்டுவைப்பீர்!

எதற்கு , எதற்கு ?

அறிவனுக்கு எதற்கு ஞானப் பழம் ?
ஆண்டிக்கு எதற்கு நவ பாஷாணம் ?
அழகனுக்கு எதற்கு ஐம்பொன் ?
அதனால் எல்லாம் எமக்கே!

முச்சந்தி முரசு - 13



கண்டேன், காவிரி கரைதனிலே:

வீதிதோறும் கோயில் கண்டேன்
கோயில்தோறும் குளம் கண்டேன்
குளம்தோறும் தரையையே கண்டேன்

குடந்தை உலா:

நளனின் குளம் நள்ளாரில் நலியுது
இராகுவின் தீர்த்தம் தீர்ந்தே போனது
உப்பிலியின் குளம் உலர்ந்து உறைகிறது
வாஞ்சியின் குளம் வரண்டு வாழ்கிறது
வருணா வஞ்சனை ஏனோ?

முச்சந்தி முரசு - 12



உலகப் பந்து:

பந்தைச் சிதைத்துப் பலத்தை வீழ்த்துவோம்
பார்ப்பவர் காதில் பூவைச் சுற்றுவோம்
பன்னாட்டு விளையாட்டைப் பரிகாசம் பண்ணுவோம்

முச்சந்தி முரசு - 11



அறிவுலக அடிமைகள்:

பகல் இரவு எனும் பாகுபாடு எதற்கு
பசி தூக்கம் எனும் உணர்வு எதற்கு
பல்லடுக்கு மாளிகையில் பணிபுரிவோமே
பன்னாட்டு முதலைக்கு அடிமைசெய்வோமே!

உறங்குவதற்கு அல்ல இரவுகள்
உண்பதற்கு அல்ல உணவுகள்
ஊதியம் ஒன்றே கனவுகள்
உலகம் இணைக்கும் அடிமைகள்!

Saturday, 10 March 2018

முச்சந்தி முரசு - 10


மூவுலக சஞ்சாரி:

பொய்கள் கூடிப் போட்டன மாநாடு

பொழுது புலர்ந்ததும் ஊரெல்லாம் சுற்றிவர

பொருத்தமாய்க் கிடைத்ததே முகநூல் வாகனம்

முச்சந்தி முரசு - 9



காலந்தோறும் கைக்கிளை:

காதல் - ஏற்றால் களிப்பு 
காதல் - மறுத்தால் அழிப்பு
காதல் - காலன் வாகனமோ?



முச்சந்தி முரசு - 8




எமதர்மம்:

காப்பதற்கோர் கவசமில்லையென

காக்கும் காவலனே காலனானான்

கரு காவாது மாண்டாளே தாயுமானானூரில்!



Wednesday, 7 March 2018

முச்சந்தி முரசு - 7


                                                                                                                                                                   
இன்பமயம்:

வங்கியில் வேலையெனின் களவாடிக் களிக்கலாம்

வாய்ச்சண்டை வீரமெனின் ஊடகத்தில் உலவலாம்

வாக்கு வாங்கி வென்றிடின் சிலையைத்தான் உடைக்கலாமே!

Monday, 5 March 2018

முச்சந்தி முரசு - 6

பொன்னியின் செல்வர்கள்:

பயிர் பிழைக்க கையேந்துவது உழவர்

வயிறு பிழைக்க வசைபாடுவது அரசியலார்

கயிறு திரிக்க களம் அமைப்பதோ ஊடகத்தார்

Saturday, 24 February 2018

முச்சந்தி முரசு - 5



     நாட்டுக்குள் நரிகளாம்:

     மலரென எழுதுமென்றாரே
     மக்களும் முன்வந்தாரே
     மடியைத்தான் பறித்தாரே !

   
     எழுதுகோல் மாயக்கோல் என்பர்
     எழுதுகோல் எழுதினால் மட்டுமோ
     எழுதுகோல் செய்தாரும் மாயமே !

Thursday, 22 February 2018

முச்சந்தி முரசு - 4



   அரசியல் புதுவரவுகள்

   எவரும் வரலாம்
   எதையும் தரலாம்
   என்றும் நமதாம்!

Tuesday, 20 February 2018

முச்சந்தி முரசு - 3




வேலியும் ஓணானும்


நரிகள் தேடியதோ கூட்டாளி
நாட்டுக்குள் சிக்கியதோ காவலாளி
நட்புக்கு இலக்கணமாம் விருந்தாளி

புதரின் மறைபொருள்:

     1.     நரிகள் - தந்திரம் நிறைந்த சமூக விரோதிகள்
     2.     நாடு     -  சட்டப் பரிபாலனத்திற்கு உட்பட்ட சமூக வெளி
     3.     காவலாளி – சட்டம், ஒழுங்கை காக்கும் மக்களின் நண்பர்
     4.     விருந்தாளி – திருடன் வீட்டு விருந்தில் விரும்பி உண்டு, ஊட்டி,                                                       உறவாடுபவர்


Friday, 16 February 2018

முச்சந்தி முரசு - 2



புற்றுதோறும் பாம்பு
புலம்புவதோ எறும்பு
புகாரில் சிக்குவது பிடாரன் கம்பு!

புதிர் சாவி:
1. புற்று  – பல்லோர் சேமிப்பை, வணிக வாய்க்காலில் பாய்ச்சி வளம்                           பெருக்கும் வங்கி எனும் கட்டமைப்பு
2. எறும்பு – சிறுகச் சிறுக பன்னாளில் சேமித்து பாதுகாப்பிற்கென வங்கியில்           வைக்கும் வாடிக்கையாளர்
3. பாம்பு – பலத்தைக் காட்டிப் புற்றை ஆக்கிரமித்து கபளீகரம் செய்யும்                              பெருங்கடன்தாரர்கள்
4. பிடாரன் – கண்ணிமையாது கண்காணிக்க உருவான நெறிமுறைகள்

5. கம்பு    -  தூங்கியே கோட்டைவிடும் துப்புக்கெட்ட தணிக்கை

Wednesday, 14 February 2018

காதலர் தினம்





காதல் செய்வீர் மானிடரே!

கனவிலும் மறவாக் காதலியை
கண்ணினும் மேலாம் கண்ணாட்டியை
கடிந்தும் அன்பூறும் பிள்ளைகளை
கடைவரை குற்றம் பொறுக்கும் பெற்றோரை
கரவாது உறவாடும் உடன்பிறப்புகளை
கலந்து மகிழ்ந்திடும் நல் உற்றாரை
கலங்கும்காலை கைகொடுக்கும் நட்டாரை
கணமும் துறக்கவொண்ணாத் தாய்நாட்டை
கற்கச் சிறந்த நம் தாய்மொழியை
கடனெனக் காப்பதே களிப்பேருவகை
ஆதலினால் ,
காதல் செய்வீர் மானிடரே!
கடுஞ்சினம் துறந்து கடும்பகை மறந்து
கடலெனக் காதல் கொள்வீர் ஆருயிர்மீதெலாம்!                                                                                                                                                                                                                                                                                                  (காதலர் தினம் – பிப்ரவரி 14)

Saturday, 10 February 2018

முச்சந்தி முரசு -1




                                                                   நாட்டு நடப்புகளை நாள்தோறும் நாம்  படிக்கிறோம், கேட்கிறோம், பார்க்கிறோம். அவற்றுள் சில நிகழ்வுகள் மட்டும் மனத்தைப் பாதிக்கின்றன, அல்லவா?   சில நிகழ்வுகள் நெஞ்சை உலுக்குகின்றன, சில நெஞ்சை நெகிழ வைக்கின்றன, வேறு சில விரக்திகொள்ளச் செய்கின்றன, மற்றும் சில சினத்தைச் சிந்தையில் தகிக்க வைக்கின்றன.

அவற்றைப் பற்றி உடனுக்குடன் மனத்தில் தோன்றுவதை அவ்வப்போழ்தே பகடியாய்ப் பதிக்க விழைவதன் விளைவாய் இப்பதிவுகள் வருகின்றன. சிரித்துக்கொண்டே திட்டுவதைப்போல், புன்னகைத்தே ஏளனம் செய்வதைப்போல் எழுதினாலோ, பேசினாலோ மனச்சுமை குறைவதை உணரலாம். படிப்பவர்க்கும் கேட்பவர்க்கும் அதே நிலை ஏற்படும் என நம்புகிறேன். மேலும் விமரிசனத்திற்கு உள்ளாகும் நபர்கூட தன்னைக் கிண்டல் செய்திருப்பதைப் படித்தால் சினம் கொள்ளாது சிந்திப்பார் என நம்பலாம். 

நறுக்குத் தெறித்தாற் போல நாலு வார்த்தை கேட்டுவிடவேண்டும் என்று கோப வயப்படும்போது, அதையே சற்று மடைமாற்றி கேலியும் கிண்டலும் செய்தாலென்ன? எள்ளலும், ஏளனமும், நக்கலும், நையாண்டியும், குத்தலும், பரிகசித்தலும் தமிழ் இலக்கியத்தில் காணக் கிடைப்பனவாம். எனவே, இதையும் ஓர் இலக்கியச் சுவையுடன் கூடிய சமுதாயப் பணியென்றே கொள்வோமாக. இத்தகு விகடம் கேலிச் சித்திரம் போன்றதே. இந்த வகையில் பாரதி நமக்கெல்லாம் முன்னோடி ஆவார்; காந்தியையும் தம் எழுத்தில் கேலியாய்ச் சாடியவர் அன்றோ?

தவறையும் குற்றத்தையும் தூற்றுவதே யன்றி அவதூறு கிளப்புவது நம் நோக்கம் அன்று. அறச்சீற்றத்தினை ஆற்றுப்படுத்த இது ஓர் சிறு முயற்சி. யார் மனத்தையும் புண்படுத்துவதன்று நம் நோக்கம்; ஊடகச் செய்திகளை அறியாவிடின், இப்பதிவுகளும் விளங்கா. எனவே, நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி வாசிக்கவும்.


அகந்தையின் அத்துமீறல்

அனைவரும் தூற்றுவரே
அர்ச்சகர் கைவண்ணம்
அம்மனும் அழகாமோ சுடிதாரில்


அதிவிரைவு ஆபத்து

விழைந்தால் சேர்வு
வெறுத்தால் முறிவு
நொடியில் தீர்வு

நாட்டுப் புறத்துப் பஞ்சாயத்து
நாட்டாமை மீதின்று பிராது
நானாவித சொம்புகள் சிலும்பின காண்!

சிறிய சொம்புகள் சேர்ந்தன
பெரிய  சொம்பைச் சாடின
சோபிதம் இழந்து சொப்புகள் ஆயின

கூண்டில் சுகிப்பது தாய்க்கிளியாம்
குளிர் விட்டுளறுது தந்தைக் கிளியாம்
குட்டிக் கரணம் அடிப்பதோ இளங்கிளிகளாம்


பொம்மலாட்டம் :

இரண்டு பொம்மைகள் ஆடுதாம்
இடையிடையே அவை விலகுதாம்
இருட்டில் சமரசம் கிட்டுதாம்
மாயக் கயிறு ஆட்டுதாம்


 சகல கலா வரி:

அப்பா தந்தார் அப்படியே சம்பளத்தை
அம்மா போட்டாள் அம்மாதக் கணக்கை
அரசு புகுந்து அள்ளிச் செல்லுதே


2018 சந்திர கிரகணம்   
( 152 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய நிகழ்வு)

சாய்கதிர் முத்தாடி சிவந்தனையோ
சந்தியில் மயங்கி நீலம் பாரித்தனையோ
சடுதியில் மறைந்து சல்லாபித்தனையோ
சாந்தியில் பூரித்துப் பருத்தனையோ


பக்தியும் பழிப்பும்

ஆண்டாளைப் பழித்தால்
அடியவர்க்கு கோபம்
ஆத்திரத்தில் பறக்குதே புட்டிகள்

பாவம் ஆண்டாள்
பழித்தவரை விஞ்சியதே
பக்தர்கள் பழிப்பு!