எனது மின்னூல்கள்

Wednesday, 14 February 2018

காதலர் தினம்





காதல் செய்வீர் மானிடரே!

கனவிலும் மறவாக் காதலியை
கண்ணினும் மேலாம் கண்ணாட்டியை
கடிந்தும் அன்பூறும் பிள்ளைகளை
கடைவரை குற்றம் பொறுக்கும் பெற்றோரை
கரவாது உறவாடும் உடன்பிறப்புகளை
கலந்து மகிழ்ந்திடும் நல் உற்றாரை
கலங்கும்காலை கைகொடுக்கும் நட்டாரை
கணமும் துறக்கவொண்ணாத் தாய்நாட்டை
கற்கச் சிறந்த நம் தாய்மொழியை
கடனெனக் காப்பதே களிப்பேருவகை
ஆதலினால் ,
காதல் செய்வீர் மானிடரே!
கடுஞ்சினம் துறந்து கடும்பகை மறந்து
கடலெனக் காதல் கொள்வீர் ஆருயிர்மீதெலாம்!                                                                                                                                                                                                                                                                                                  (காதலர் தினம் – பிப்ரவரி 14)

No comments:

Post a Comment