கண்டேன், காவிரி கரைதனிலே:
வீதிதோறும் கோயில் கண்டேன்
கோயில்தோறும் குளம் கண்டேன்
குளம்தோறும் தரையையே கண்டேன்
குடந்தை உலா:
நளனின் குளம் நள்ளாரில் நலியுது
இராகுவின் தீர்த்தம் தீர்ந்தே போனது
உப்பிலியின் குளம் உலர்ந்து உறைகிறது
வாஞ்சியின் குளம் வரண்டு வாழ்கிறது
வருணா வஞ்சனை ஏனோ?
No comments:
Post a Comment