எனது பாடல்களை என் குரலில் கேட்க பின் வரும் இணைப்பைச் சொடுக்கவும் :
தமிழ்க் கவிதைகள் சங்கமம் - Saba Vadivelu
தமிழின் வனப்பும் வளமையும் உலகோர் அறிய புதுமை படைப்போம் - புதுக்கவிதைகள் சமைப்போம் - நட்பு வட்டம் தமிழ் சுவைக்க நாளும் முனைவோம் -
Monday, 9 August 2021
Sunday, 25 July 2021
தமிழ் எனும் அமுதம்
(அமுதே தமிழே திரைப்படப் பாடல் மெட்டு)
திருவே, தகையே, திறமிகு மொழியே,
செந்தமிழே
தினம்
தினம் புதுமைகள் தா
திகட்டாச்
சுவைதனில் வா
தமிழே
உலகை நீ யாளு (திருவே தகையே....)
ஒன்றல்ல இரண்டல்ல
சிலவல்ல செல்வங்கள்
இலக்கியங்கள்
வளம் குவித்தாய்
இலக்கணங்கள்
விதி வகுத்தாய்
நின்
இயலும் இசையும் கூத்தும்
இவை
கலந்தால் குறைதான் ஏது
அந்த
இறையே உனை வாழ்த்த
தமிழே
உலகை நீ யாளு (திருவே, தகையே....)
நாவில் சனி
சங்கடம்
தருவதும் நீயே
சங்கடம்
தீர்ப்பதும் நீயே
அண்மையில்
நின் குடியிருப்போ
அலட் டுவார்
அவர்தம் நாவினிலோ
ஆண்டவனை நிந்திக்கும்
கோவிலை நிந்திக்கும்
அவரொடு
அண்ணித்திருப்பது நீயன்றோ
நாவில்
சனி நல்லோர்க் கில்லை
நாளும்
தூற்றுவார் சொல்லில் புகுவாய்
நாட்டோர்
கொதிக்க அடிபணித்திடுவாய்
நலமோ
? தீதோ ? நானறியேனே!
Tuesday, 29 June 2021
அவரவர் கடன்
ஈன்று
புறந்தந்து வளர்த்தல் தாயின் தலைக் கடன்
நன்று
வளம் பெறக் காத்தல் தந்தையின் கடன்
அறமே
தலையென அறிவித்தல் ஆசான் கடன்
கல்வி
கேள்வி கலைகள் தேர்தல் மகவின் கடன்
கள்ளம்
களவு கபடு நினையாது நட்டல் நண்பர் கடன்
கற்ற
வித்தை ஒப்பவே பணி யமைத்தல் அரச கடன்
பழியும்
பாவமும் படராது பேணல் சமூகக் கடன்
போர்
மறந்து பேதம் துறந்து மனிதம் மலர்த்தல்
மண்
மீது என்றும் மன்பதையின் கடனாம்
வழாத
மாரியும் வருத்தா இயற்கையும் ஈந்து
உலகெலாம்
புரத்தல் எம் இறைக் கடனே!
Wednesday, 30 September 2020
Monday, 28 September 2020
Friday, 30 August 2019
எனது நூல்கள்
அச்சிடப்பெற்ற எனது நூல்களை வாங்க, தொடர்பு கொள்க:
94422 06051 (அ) sabavadivelu@gmail.com
Monday, 26 August 2019
Tuesday, 18 September 2018
முச்சந்தி முரசு - 19
துண்டிக்க விரும்பா தொடர்பு:
அரை நொடிக்கொருதரம் புதுப்பிப்பு
அரட்டையர் குழுவில் அங்கலாய்ப்பு
அவ்வப்போது வேலையின் நினைப்பு
Wednesday, 12 September 2018
முச்சந்தி முரசு - 18
மவுனப் புரட்சி
பேரவையில் பல்லோர்
பெருவிவாத சர்ச்சைகள்
இல்லையொரு பேச்சு
இணைய வழியாச்சு
முச்சந்தி முரசு - 17
வரிதோறும் வரி
வழிக்கு வருவார்களோ
வலைதளப் பதிவர்கள்
வரிக்கு வரி வரி விதித்திட்டால்?