எனது மின்னூல்கள்

Sunday, 25 July 2021

நாவில் சனி

 

  

சங்கடம் தருவதும் நீயே

சங்கடம் தீர்ப்பதும் நீயே

அண்மையில் நின் குடியிருப்போ

அலட் டுவார் அவர்தம் நாவினிலோ

ஆண்டவனை நிந்திக்கும் அரசியலார் 

கோவிலை நிந்திக்கும் கூத்தர்

 மதத்தை நிந்திக்கும் மதகுருமார் என 

அவரொடு அண்ணித்திருப்பது நீயன்றோ

நாவில் சனி நல்லோர்க் கில்லை

நாளும் தூற்றுவார் சொல்லில் புகுவாய்

நாட்டோர் கொதிக்க அடிபணித்திடுவாய்

நலமோ ? தீதோ ? நானறியேனே!


No comments:

Post a Comment