எனது மின்னூல்கள்

Tuesday 17 May 2011

.... என் சொல்லித் துதிப்பேனோ ....

சக்தியே பராசக்தியே ஆதி பராசக்தியே !
மா சக்தியே மண்ணுயிர்க் கெல்லாம் மாதாவே
தீப்பிழம்பின் ஒளியும் நீயே
ஊழிக்காற்றின் நர்த்தனமும் நீயே
ஆழிவெள்ள ஆர்ப்பரிப்பும் நீயே
முடிவற்ற வெளியும் நீயே
முடிவுறும் மண்ணும் நீயே
அண்டபகிரண்டங்களையும் படைத்தாளுவது நீயே
அறிவதும் நீயே அறியப்படுவதும் நீயே
நானுணரும் பொருளனைத்தும் நீ படைத்தவையே
நின் படைப்பையே உவமையாக்கி போற்றல் தகுமோ
மா சக்தியே உனை என் சொல்லி வாழ்த்துவேனோ
சொல்லெனக்கு நீயே !
சொல்லும் நீயே , பொருளும் நீயே
சொல்லின் ஒலியும் μசையும் இசையும் நீயே
இயற்கை நீயே , இயற்றலும் நீயே
இயல்பாய் காப்பாய் உயிரனைத்தையும் நீயே
அன்னை பராசக்தி போற்றி போற்றி !!

No comments:

Post a Comment