நூல் பல கற்க
தம்பிகளே ! தங்கைகளே !
தகவல் ஒன்று கேளுங்களேன்
நாளும் பள்ளி சென்றிடுவீர்
நன்கு பாடம் கற்றிடுவீர்
நினைவில் நிறுத்தப் பழகிடுவீர்
தேர்வில் தேர்ச்சிப் பெற்றிடுவீர்
அவை மட்டும் போதா கண்மணிகாள்
அறிவை நாளும் வளர்த்திடனுமே
அதற்கு வழியென்ன கேட்பீராயின்
அறிஞர் சொல்வர் “ நூல் பல கற்க ”
கதைகள் கவிதைகள் கட்டுரைகளாம்
கணிதம் அறிவியல் அரசியலாம்
பொருளியல் புவியியல் பொதுஅறிவாம்
சரித்திரம் சமயம் தத்துவமாம்
எத்துணை எத்துணை நூல் வகையாம்
எல்லாம் நீங்கள் சுவைத்திடலாம்
நூல்கள் பலவும் படித்திடுவீர்
நுண்ணிய அறிவைப் பெற்றிடுவீர்
விலைக்கு வாங்கியும் படித்திடலாம்
நூலகம் சென்றும் படித்திடலாம்
நூல்கள் கற்று முடித்திடுவீர்
நூல்கள் இயற்றக் கற்றிடுவீர்
படித்தது போலவே நடந்திடுவீர்
பாரினில் நம்புகழ் பரப்பிடுவீர்
( உலக புத்தக தினம் - ஏப்ரல் 23 )
No comments:
Post a Comment