எனது மின்னூல்கள்

Tuesday 17 May 2011

.... இருவருமாய் இறைஞ்சிடுவோமே ....


இருமுதுகுரவர் இணையடி போற்றி

இருமரபுணர்ந்து இயல்பாய் வளர்த்து

இருபொருளதனை இருவரும் இயற்றி

இருமருந்ததனை இருந்திட ஏற்று

இருசுடரதனை இயங்கிடத் துதித்து

இருடிகளவரை இதயத்தில் பதித்து

இருவகையறமும் இம்மையில் துய்த்து

இருமையிலும் இருவராய் இருந்திட

இருபோதும் இறைவனை இறைஞ்சிடுவோம்


அறிக
 

இருமுதுகுரவர் --------- தாயும், தந்தையும்
இருமரபு ---------- தாய்வழி, தந்தைவழி வந்த மரபுகள்
இருபொருள் ---------- கல்வியும், செல்வமும்
இருமருந்து ---------- உணவும், நீரும்
இருசுடர் ---------- சூரியனும், சந்திரனும்
இருடிகள் ----------- பதினொரு முனிவர்கள்
(வசிட்டர் தொடங்கி துருவாசர் ஈறாக)
இருவகையறம் ------- இல்லறமும், துறவறமும்
இருமை ---------- இம்மையும், மறுமையும்
இருபோது ----------- காலையும், மாலையும்
 

No comments:

Post a Comment