....ஏன் சென்றாய் ? ....
பூமி சிறக்கப் பூத்துவந்தாய்
சாமியெனவே கருத்தில் கொண்டார்
சாதித்துக் காட்டினாய் சமுதாயத்தொண்டு
சாதியைக் கடந்து சமயம் வென்று
கை அசைய சித்து பிறந்தது
கண்அசைய கங்கை வந்தாள்
தலை அசைய தன்வந்திரி வந்தான்
விரல் அசைய விளையாட அரங்கமானது
பல் அசைய பல்கலையே உதித்தது
நா அசைய ஏழிசை செழித்தது
மெய் அசைய ஏழமை சென்றது
பார் அசைய ஏனின்று சென்றாய் ?
மானுட சேவையால் மகத்துவம் அடைந்த
சாய் பாபா மறைவிற்கான இரங்கற் பா
No comments:
Post a Comment