எனது மின்னூல்கள்

Monday 25 January 2016

        கல்வி  தருவாள்  கலைமகள்


கண்ணினும் மேலாம் கல்விஅகக்
கறைகள் களைவதாம் கல்வி
கலைகள் பெருக்கிடும் கல்விமனக்
கவலைகள் போக்கிடும் கல்வி              …..  (கண்ணினும்)               

அறிவைப் பெருக்கிடும் கல்விஆர்க்கும்
ஆக்கம் தந்திடும் கல்வி
இன்பம் ஈந்திடும் கல்வி என்றும்
ஈயக் குறையாக்  கல்வி                   …..     (கண்ணினும்)    
                         
உலகை உய்த்திடும் கல்விநமக்கு
உண்மைகள் உரைத்திடும் கல்வி
நாளும் வளர்வதாம் கல்விஎவரும்
நாடிப் பெறுவதும் நற்கல்வி                …..    (கண்ணினும்)   
                  
பல்துறை கொண்டிடும் கல்விதிறன்
பல்கிப் பெருக்கிடும் கல்வி
தகைமை தருவது  கல்விஎளியோர்
தாழ்வு தகர்ப்பதும் கல்வி                   …..     (கண்ணினும்)    
                  
சமயம் வெல்வது கல்விவீண்
சாதிகள் கடப்பதும் கல்வி
சமத்துவம் புரிவதும் கல்விஎதிலும்
சாதனை விளைப்பதும் கல்வி            …..      (கண்ணினும்)       
               
ஏழமை விரட்டிடும் கல்விஇல்லார்
ஏற்றம் தீட்டிடும் கல்வி
ஞாலம் சுருக்கிடும் கல்விஉயர்
ஞானம் தருவதும் கல்வி                  …..      (கண்ணினும்

சிந்தனை சீர்த்திடும் கல்விநம்
         சிறுமைகள் தீர்த்திட வேண்டுமே
         புலமைகள் நிறைத்திடும் கல்விபலபல
புதுமைகள் துலக்கிட வேண்டுமே           ….. (கண்ணினும்)      

பேதைமை போக்கிடும் கல்விநல்ல
         மேதைமை வார்த்திட வேண்டுமே
         கீழமை விரட்டிடும் கல்வி  – இனிய
         தோழமை வளர்த்திட வேண்டுமே     …..    (கண்ணினும்)   

         அன்பைப் போதிக்கும் கல்விமாந்தருள்
         பண்பை வளர்த்திட வேண்டுமே
         நாநயம் கற்பிக்கும் கல்விநம்மிடை
         நாணயம் நாட்டிட வேண்டுமே        …..     (கண்ணினும்)   

             
இயற்கை  ஆய்ந்திடும்  கல்விஎன்றும்
இறைமை உணர்த்திட வேண்டுமே
கல்வியின் நாயகி கலைமகளேஎமக்கு
காலமும் நல்குவாய் நற்கல்வி             …..  (கண்ணினும்)  

No comments:

Post a Comment