எனது மின்னூல்கள்

Thursday 29 October 2015

காவடிச் சிந்து - கந்தக் காவடி

       கந்தக் காவடி    

   (மெட்டு: காவடிச் சிந்து)

கந்தன் என்னும் பேரைக்
காதினிலே கேட்டாலுமே
காதல் பெருகுதடிகிளியே
களிமிகு கொள்ளுதடி கிளியே
களிமிகு கொள்ளுதடி

வேலன் என்னும் பேரை
வேறெவரோ கூறினாலும்
வேட்கை கொள்வேனடிகிளியே
வேறெதுவும் வேண்டேனடி  – கிளியே
வேறெதுவும் வேண்டேனடி

முத்துக் குமரன் பேரை
முணுமுணுக்கக் கேட்டாலுமே
முற்றும் இனிக்குதடிகிளியே
முன்னைவினை தீருதடி கிளியே
முன்னைவினை தீருதடி

கந்தனென்றும் கடம்பனென்றும்
கார்த்திகேய கதிர்வேலென்றும்
காசினியில் அழைப்பாரடிகிளியே
கருத்தினிலே நின்றானடி கிளியே
கருத்தினிலே நின்றானடி
  
தண்டமிழின் தலைவனாவான்
தந்தைக்கே குருவுமானான்
தணிகைவேலன் தருவானடிகிளியே
தவமதுவே தழைக்குதடிகிளியே
தவமதுவே தழைக்குதடி

ஆறுபடை வீடுகொண்டான்
ஆற்றுப்படைத் தலைவனான்
ஆடுமயில் அமர்ந்தோனடிகிளியே
ஆறுமுகம் அருள்வானடி கிளியே
ஆறுமுகம் அருள்வானடி

சேவற்கொடியோன் செந்தில்
சேரும் அடியாரெல்லாம்
சேமம் அடைவாரடிகிளியே
சேவடி சேர்வாரடிகிளியே
சேவடி சேர்வாரடி                                                                     திருச்சிராப்பள்ளி  .... சபா வடிவேலு












  




No comments:

Post a Comment