புற்றுதோறும் பாம்பு
புலம்புவதோ
எறும்பு
புகாரில்
சிக்குவது பிடாரன் கம்பு!
புதிர் சாவி:
1. புற்று – பல்லோர் சேமிப்பை, வணிக வாய்க்காலில் பாய்ச்சி
வளம் பெருக்கும்
வங்கி எனும் கட்டமைப்பு
2. எறும்பு – சிறுகச் சிறுக பன்னாளில்
சேமித்து பாதுகாப்பிற்கென வங்கியில் வைக்கும்
வாடிக்கையாளர்
3. பாம்பு – பலத்தைக் காட்டிப் புற்றை
ஆக்கிரமித்து கபளீகரம் செய்யும் பெருங்கடன்தாரர்கள்
4. பிடாரன் – கண்ணிமையாது கண்காணிக்க
உருவான நெறிமுறைகள்
5. கம்பு - தூங்கியே
கோட்டைவிடும் துப்புக்கெட்ட தணிக்கை
No comments:
Post a Comment