நெஞ்சு பொறுக்குதில்லையே -
காமத்தில் வெந்தக் காமுகனைக்
கணத்தில் கருக்கினாய் சரியே!
கள்ளமிலாச் சிறுமியைச் சிதைத்தல் அறமோ?
களங்கமுற்றாய்த் தீயே நீயும் ஓர் ஆணாய்!
(30.7.16 அன்று விழுப்புரத்தில் 32 வயது வெறியன்
ஒருதலைக் காதல் கொண்டு 17 வயது சிறுமியைத் தீயிட்டுக் கொன்ற கொடுமை)
காரிருள் போர்வையில் காமக்கயமை வெறியாட
கழிசடை இருவரும் காட்டுப் பன்றிகளாயினரே
ஒருவர் அழுக்கில் ஒருவர் கூடிடவும்
ஒப்பக் கூசாதோ வேசை உறுப்பிற்கும்
கழிப்பவளைக் களித்தீர் புதரிடை மாய்த்தீர்
கூறக்கூசிடும் கொடுமைதான் புரிந்தீர்
கொடும்பழி கொண்டீர் வாழுரிமை இழந்தீர்
அற்று விழட்டும் உம் ஆண் எனும் அடையாளம்
(31.7.16 அன்று தஞ்சை ,சாலியமங்கலம் நிகழ்வு)
No comments:
Post a Comment