எனது மின்னூல்கள்

Monday 30 May 2016









யாருக்கு மதிப்பு
மரித்ததும் –
மனிதவுடல் மயானத்துச் சாம்பல்
விலங்கோ 
காட்சியாகும் கலைப்பொருளாம்
கூறிடுவீர் , யாருக்கு மதிப்பு?
மனிதராமாக்களா?





              யாரிடம் போராட?

நிலப்பரப்பில் எங்கோவொரு நீர்ப்பரப்பு இங்கேயாம்
நீர்ப்பரப்பில் ஆங்காங்கே நிலப்பரப்பு அங்கேயாம்
இயற்கைக் கொடையில் இத்தனை அநீதியா? 
சமநீதி கோரி யாரிடம் போராட?

சூல்கொண்ட மேகங்களே
மறித்து நிற்கும் மலையைத் தாண்டி
மறுபுறமும் பொழிவாய் மழையை
நிலத்தில் நீதி நாட்டிடுவாய்
            (அண்மையில் கேரளம் சுற்றிவந்தபின் மனதில் தோன்றியது)